28.1.
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி, இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரைத் தியானத்தின் மூலமாக நிறுத்த முடியுமா?
பதில்: இரண்டு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போரின் விளைவுகளையும், கொடுமைகளையும் தியானத்தின் மூலம் ஏற்படக் கூடிய மன அமைதியினால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். நிறுத்த முடியாது. தியானம் செய்தாலும் தனி மனிதனுடைய மனோசக்திக்கு ஓர் எல்லை உண்டு. போர் வெறியர்கள் அத்தனை பேருடைய மனதையும் மாற்றக் கூடிய அளவுக்குத் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றால் போரை நிறுத்தி, அமைதி ஏற்படுத்த இயலும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
No comments:
Post a Comment